டிப்பர் மோதி தந்தை பலி, மகன் படுகாயம்!

You are currently viewing டிப்பர் மோதி தந்தை பலி, மகன் படுகாயம்!

புதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியில் தேராவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் போது குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது மகன் படுகாயமடைந்துள்ளார்.

இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் எதிரே வந்த டிப்பர் மோதி விபத்துக்குள்ளாகினர். இந்த விபத்தின் போது சுதந்திரபுரம் கொலனி பகுதியினை சேர்ந்த 53 வயதுடைய வள்ளிபுனம் ஜெயராசா என்பவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தினை ஏற்படுத்திய டிப்பர் வாகனமும் சாரதியும் புதுக்குடியிருப்பு சிறீலங்கா காவல்த்துறையினர் கைதுசெய்யப்பட்டு சிறீலங்கா காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக் குறித்தான விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள