தடுப்பூசி செலுத்தலில் முல்லைத்தீவு முதலிடம்- மட்டக்களப்புக்கு கடைசி இடம்!

You are currently viewing தடுப்பூசி செலுத்தலில் முல்லைத்தீவு முதலிடம்- மட்டக்களப்புக்கு கடைசி இடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 28 சதவீதமானோரே தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளனர். அதிகப்படியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 82 சத வீதமானோர் ஏற்றிக்கொண்டுள்ளனர் என விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத், தெரிவித்துள்ளார்.

கொரோனா ஒழிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 55 சதவீதமானோருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மாவட்ட ரீதியில் அதிகளவானோர் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்ற போதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தளவிலேயே தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையை நீக்குவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், நிலைமையை கருத்திற்கொண்டு அது தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments