தடைகளை தாண்டி செம்மணியில் முள்ளிவாய்கால் நினைவு!

You are currently viewing தடைகளை தாண்டி செம்மணியில் முள்ளிவாய்கால் நினைவு!

முள்ளிவாக்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல்நாள் நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் செம்மணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிரனால் நினைவு கூறப்பட்டது காவல்த்துறை இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடைபெற்றது.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், சட்ட ஆலோசகர் சட்டத்தரணி காண்டீபன், மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன் யாழ் மாநகர சபை உறுப்பினர் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொண்ட காவல்த்துறையும்

இராணுவமும் நிகழ்விடத்தில் பிரசன்னம் ஆகியிருந்து நெருக்கடியை விளைவித்தனர்

வணக்கத்தில் கலந்து கொண்டவர்களை தனித்தனியே படம் எடுத்து விபரங்களை சேகரித்தனர் காவல்த்துறையினர்.அதேவேளை

வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவீர்கள் என காவல்த்துறை எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.

காணொளிக்கு நன்றி உறுமல்

பகிர்ந்துகொள்ள