தப்பியோட முயன்ற சந்தேகநபரால் இருவர் காயமடைந்துள்ளனர்!!

You are currently viewing தப்பியோட முயன்ற சந்தேகநபரால் இருவர் காயமடைந்துள்ளனர்!!

கிளிநொச்சியில் காவல்த்துறையின் பிடியிலிருந்து தப்பியோட முயன்ற சந்தேகநபரால் இருவர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்ததுடன் சம்பவத்தில் சந்தேகநபரின் காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவரை காவல்த்துறையின் கைது செய்து மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது குறித்த சந்தேகநபர் காவல்த்துறையின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில் , மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் பாதசாரி ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானதில் பாதசாரி காயமடைந்துள்ளார்.

அத்துடன் மோட்டார் சைக்கிளை செலுத்திய காவல்த்துறை உத்தியோகத்தரும் சந்தேகநபரும் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த மூவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி சிறீலங்கா காவல்த்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்

பகிர்ந்துகொள்ள