தமிழகத்தில் கொரோனா ; இன்று மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று!

  • Post author:
You are currently viewing தமிழகத்தில் கொரோனா ; இன்று மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் இன்று மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உள்ளது. வீட்டுக்கண்காணிப்பில் 21,381 பேர் உள்ளனர். அரசுக்கண்காணிப்பில் 20 பேர் உள்ளனர். கண்காணிப்பு முடிந்தவர்கள் எண்ணிக்கை 85,253 ஆகும்.

மாவட்ட வாரியாக சென்னையில் அதிகபட்சமாக இன்று ஒரு நாளில் மட்டும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மொத்தம் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 285 ஆக உள்ளது. கோவையில் இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவையில் மொத்தம் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. திண்டுக்கலில் 5 பேருக்கும், நெல்லையில் 2 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள