தமிழகத்தில் கொரோனா ; தொற்று எண்ணிக்கை1683 ஆக அதிகரிப்பு!

  • Post author:
You are currently viewing தமிழகத்தில் கொரோனா ; தொற்று எண்ணிக்கை1683 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 90 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர். அதன்மூலம் குணமடைந்து வெளியேறியுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 752 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 908 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்துவருகின்றனர். இன்று இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்மூலம் சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள