தமிழகத்தில் கொரோனா ; பாதிப்படைந்தவர் எண்ணிக்கை 12,488 ஆக அதிகரிப்பு!

  • Post author:
You are currently viewing தமிழகத்தில் கொரோனா ; பாதிப்படைந்தவர் எண்ணிக்கை 12,488 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தவர் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. துபாய், குவைத், மலேசியாவிலிருந்து தமிழகம் திரும்பிய 13 பேருக்கும், மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் திரும்பிய 49 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ‘தமிழகத்தில் இன்று மட்டும் 10,333 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாட்டிலிருந்து 601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. துபாயிலிருந்து வந்த 23 பேருக்கும், துபாய், குவைத், மலேசியாவிலிருந்து தமிழகம் திரும்பிய 13 பேருக்கும், மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் திரும்பிய 49 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 12,448 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 552 பேருக்கும், செங்கல்பட்டில் 22 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள