தமிழக இளைஞன் யாழ் வைத்தியசாலையில் மரணம்!

You are currently viewing தமிழக இளைஞன் யாழ் வைத்தியசாலையில் மரணம்!

யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த, தமிழகம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், இன்று காலை உயிரிழந்துள்ளார். வீரபுத்திரன் மணி என்ற 36 வயதுடைய நபரே உயிரிழந்தவர் ஆவார்.

இணுவில் பகுதியில் தங்கியிருந்த குறித்த நபர், தனக்குத் தலையில் கட்டி உள்ளது என்று கூறி, 7 நாள்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே, தற்போது இவர் உயிரிழந்துள்ளார். இவரது இறப்பு தொடர்புடைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பகிர்ந்துகொள்ள