தமிழர்களின் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும்! நாடாளுமன்றில் ஓங்கியொலித்த குரல்!

You are currently viewing தமிழர்களின் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும்! நாடாளுமன்றில் ஓங்கியொலித்த குரல்!

வடக்கு, கிழக்கை மீளக்கட்டியெழுப்ப நீங்கள் என்ன சலுகைகளை வழங்கினீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆவேசமாக வினவியுள்ளார்.

நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், தமிழ்த் தேசம் மீது கடந்த நான்கு, ஐந்து தசாப்தங்களாக தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் ஆக்கிரமிப்பு யுத்தங்களை நீங்கள் முன்னெடுத்திருக்கின்றீர்கள்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்ற உதவிகள், உலக நாடுகளிடம் இருந்து பெற்ற நிதி உதவிகள், உள்நாட்டு உற்பத்திகள் மூலமாக கிடைத்த வருமானங்களின் ஒரு பகுதி தமிழர் தேசத்திற்கு எதிரான இன அழிப்பிற்கும், ஆக்கிரமிப்பிற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக எமது தேசம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய தேசத்தை நாம் மீளக்கட்டியெழுப்ப நீங்கள் என்ன சலுகைகளை வழங்கினீர்கள்?

வடக்கு, கிழக்கு தமிழர் தேசத்தை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விசேட பிராந்தியமாக பிரகடனப்படுத்த வேண்டும், அதற்கென விசேடமான நிதி உதவிகள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எங்களால் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இனவாதம் என்ற மனநோய்க்கு முற்றுபுள்ளி வைக்கப்பட வேண்டுமாக இருந்தால் தமிழர்களின் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

இலங்கையில் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமஷ்டிக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments