தமிழர்கள் மீதான கொடூரங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்

You are currently viewing தமிழர்கள் மீதான கொடூரங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்

தமிழ் மக்களுக்கு எதிரான கொடூரங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் புதிய எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாளை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தொழிற்கட்சியின் புதிய தலைவர் கியர் ஸ்ராமர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதற்கான முயற்சிகளை அனைவரும் பற்றுறுதியுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள