தமிழினத்துக்கு மோடி அரசு செய்கிற பச்சைத் துரோகம் – புகழேந்தி தங்கராஜ்

You are currently viewing தமிழினத்துக்கு மோடி அரசு செய்கிற பச்சைத் துரோகம் – புகழேந்தி தங்கராஜ்

கோட்டபாயவைக் காப்பாற்ற இந்தியா சதி…

விடுதலைப் புலிகள் புதிய தாக்குதலை மேற்கொள்ளக் கூடும் – என்கிற உளவுத் துறையின் ‘கண்டுபிடிப்பு’, வீழ்ந்து கொண்டிருக்கிற கோட்டபாயவைக் காப்பாற்ற மோடி அரசு துடிப்பதையே  காட்டுகிறது. இது, ஒன்றுபட்டுப்  போராடுகிற மெஜாரிட்டி சிங்கள சமூகத்தை, புலிகளின் பெயரால் பிரிக்க நடக்கிற இந்திய – இலங்கை கூட்டுச் சதி. 

விலையேற்றம் மற்றும் ஊழல்களுக்காக, இப்போது,  ராஜபக்சக்களை எதிர்த்துப் போராடுகிற சிங்களச் சகோதரர்கள்,  கடந்த 2009ல், கோட்டபாயவின் படைகளால், மிருகங்களைப் போல தமிழ் மக்கள் வேட்டையாடப் பட்டபோது வேடிக்கை பார்த்தார்கள், தமிழினப் படுகொலையை பால்சோறு பொங்கி கொண்டாடினார்கள். அது தமிழர்கள் மீது காலங்‌ காலமாக அவர்களுக்கு இருக்கிற வெறுப்பு மற்றும் வன்மத்தின் வெளிப்பாடு. 

தமிழினத்துக்கு மோடி அரசு செய்கிற பச்சைத் துரோகம் - புகழேந்தி தங்கராஜ் 1

இப்போது இலங்கையில் நடப்பது, சிங்கள அதிபருக்கும், தமிழர்களைக் கொன்று குவித்த ‘சாதனைக்காகவே’ அவரை அதிபராக்கிய மெஜாரிட்டி சிங்கள  இனத்துக்கும், இடையிலான மோதல். 

ராஜபக்சக்களுக்கு  எதிராகப் போராடும்  மெஜாரிட்டி சமூகத்தினரின்  இனவெறியை மீண்டும்  தூண்டி விட்டு அவர்களைத் திசை திருப்புவதும். பயங்கரவாதத்துக்கு எதிரான மகாதீரனாக கோழை கோட்டபாயவைக் காட்ட முயல்வதும் தான் இந்த உளவுத் துறை உளறலின் பின்னணி.  சிங்கள சமூகத்துக்குத் தமிழர் மீது இருக்கிற வன்மத்தை உயிர்ப்பித்து, கோட்டபாயவைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள். 

சிறுபான்மை மக்களை தேச விரோதிகளாகச் சித்தரிப்பதன் மூலம், போலி தேசிய வெறியைத் தூண்டிவிடுகிற இரண்டு நாடுகள் இப்படியொரு சதியை இணைந்து மேற்கொள்வதில் வியப்பதற்கு எதுவுமில்லை. 

தமிழினத்துக்கு மோடி அரசு செய்கிற பச்சைத் துரோகம் - புகழேந்தி தங்கராஜ் 2

இந்தச் சதியின் அடுத்த கட்டமாக, இலங்கையில் எங்காவது குண்டு வெடிக்க இலங்கை அரசே ஏற்பாடு செய்யக் கூடும். புலிகளின் கைவரிசை என்று சொல்லவும் கூடும். இப்படியெல்லாம் பல முறை சீன் போட்ட அனுபவம் அதற்கு இருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு தமிழினம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..

பட்டினியால் வாடும் ஏழை எளிய ஈழ மக்களைத் தேடிச் சென்று உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்,  முன்னாள் தமிழ்ப் போராளிகள். அவர்கள்  கடைப்பிடிக்கிற  நெறியும்,    சிங்கள அரசுக்கு இருக்கிற வெறியும் ஒன்றல்ல என்பதை இந்தியா புரிந்து கொள்ளத் தவறுவது, தமிழினத்துக்கு மோடி அரசு செய்கிற பச்சைத் துரோகம்… இதை மன்னிக்கவே முடியாது…

-புகழேந்தி தங்கராஜ்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments