தமிழீழம் கேட்க மட்டுமல்ல தமிழீழத்தை காக்கவும் செய்வோம் என களமிறங்கிய புலம்பெயர்தமிழர்கள்!

  • Post author:
You are currently viewing தமிழீழம் கேட்க மட்டுமல்ல தமிழீழத்தை காக்கவும் செய்வோம் என களமிறங்கிய புலம்பெயர்தமிழர்கள்!

தமிழீழத்தாயகத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தை அடுத்து புலம்பெயர் தமிழர்கள் தமிழீழத்திலே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளுடன் களமிறங்கியருக்கினறனர்.குறிப்பாக. ,சேர்மனி சுட்காட் சிறீசித்தி விநாயகர் ஆலயத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு பிரம்படித்தீவு,சாராவெளி, சுங்கங்கேணிங ஆகிய கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 191குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கி வைக்கப்பட்டது.

12.12.2019 நோர்வே நாட்டில் இயங்கும் புலர்வின் பூபாளம் அமைப்பு ..அங்கே வசிக்கும் மக்களின் நிதிப்பங்களிப்புடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் .புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள சுதந்திரபுரம் மற்றும் வெள்ளப்பள்ள கிராமத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டு அன்றாட தேவையைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் மிகவும் கஸ்ரத்தின் மத்தியில் வசிக்கும் 35 குடும்பங்களுக்கு ஒருவருக்கு 2000ரூபா வீதம் உணவுப்பொதிகள் வழங்கினார்கள் அவர்கள் புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்தாலும் எமது மக்களிற்கு எந்த நேரத்தில் எப்படியான உதவிகள் செய்ய வேண்டும் என்று நன்றாக சிந்தித்து உடனடியாக உதவியமைக்கு எமது நன்றியையும் .பாராட்டையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

பகிர்ந்துகொள்ள