தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் இயங்கு நிலையை தகர்க களம் இறங்கிய இந்திய இலங்கை புலனாய்வு!

You are currently viewing தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் இயங்கு நிலையை தகர்க களம் இறங்கிய இந்திய இலங்கை புலனாய்வு!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் தாயக விடுதலை நோக்கிப் பயணிக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இயங்குநிலையையும் தளங்களையும் சிதைத்து அழிப்பதற்கு இலங்கை இந்தியப் புலனாய்வுக்கட்டமைப்புகள் நீண்டகாலமாகவே பகீரதப்பிரயத்தனம் செய்து வருகின்றன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் இறுக்கமான கட்டுக் கோப்பான மரபு ரீதியான முறியடிப்புச் செயற்பாடுகளினால் RAW/NIB போன்ற புலனாய்வுக் கட்டமைப்புகளினால் இன்றுவரை எமக்குள் உள்நுழைய முடியவில்லை.

2009 மே.18 ற்கு முன்னர் தமிழீழத் தாயகத்திலிருந்து சகல சதிமுயற்சிகளையும் முடியடித்தோம். 2009 மே 18 இன் பின்னர் தமிழீழம் நோக்கிய விடுதலைச் செயற்பாடுகளில், புலம்பெயர் தேசம் பிரதான இயங்குதளமாக மாறியது. எமது செயற்பாடுகளை முடக்குவதற்காக, சிறிலங்காவின் பிரதான புலனாய்வுக்கட்டமைப்பான தேசியப் புலனாய்வுப்பணியகம் (National interligent bearu) ஐரோப்பாவில் இருக்கும் புலனாய்வு நிறுவனங்களிற்குப் பெருந்தொகைப் பணத்தைச் செலுத்தி அவர்களின் உதவியுடன், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பிரதான செயற்பாட்டுத் தளங்களாக இருக்கும் தமிழ்த் தேசியக் கட்டமைப்புகளை இலக்குவைத்து தங்களது நாசவேலைகளைச் செய்யத் தொடங்கியுள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரித்தானியா, ஜேர்மனி, நெதர்லாந்து, போன்ற நாடுகளிலுள்ள எமது தேசியக்கட்டமைப்புகளினுள் ஊடுருவி அவற்றை தம்வசப்படுத்தி அழித்தொழிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் பிரித்தானியா ஜேர்மனி போன்ற நாடுகளின் தேசிய செயற்பாட்டாளர்களின் தெளிவான சிந்தனையினாலும், துணிவினாலும் சதி முயற்சி முறியடிக்கப்பட்டது. கிழக்கு ஐரோப்பாவின் முகவர் புலனாய்வு நிறுவனங்களிற்கான மில்லியன்கணக்கான யூரோ பணம் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது.

தற்போது சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் தொடர்ந்து அவர்களால் பணத்தை வழங்க முடியவில்லை. எனவே புலம்பெயர் தமிழர்களிடம் இருந்தே நிதி கறக்கப்பட்டு உளவு நிறுவனங்களிற்கு வழங்கப்படுகின்றது. நிதி வழங்கும் தமிழ் உணர்வாளர்களிற்கு தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மீள் எழுச்சி தொடர்பான நம்பிக்கைகள், கதையாடல்கள்,செயற்கையாக உருவாக்கப்பட்ட வீடியோ, புகைப்படம், ஒலிக்கோர்வை என்பன காட்டப்படுகின்றது.

தற்போது இந்த தமிழீழ விரோத சதிப்புலனாய்வுக்கட்டமைப்பு சுவிஸ் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்குள் ஊடுருவ முயற்சி செய்கிறது. இவர்களின் இலக்கு சுவிசிலுள்ள நிதிவளம்தான். அதைக் கறந்தெடுப்பதுதான். சுவிசின் தமிழ்த் தேசியச்செயற்பாட்டாளர்களின் கடுமையான உழைப்பினால் தமிழ்த் தேசியத்தைக் கட்டி வளர்க்க உருவாக்கப்பட்ட நிதிவளம் கைமாறி தமிழீழ விடுதலைப் போரின் தொடர்ச்சியை அழிக்கப்போகின்றது. பெரும்பாலான சுவிஸ் செயற்பாட்டாளர்கள் விழிப்புடன் இருக்கின்றனர்.

சதிக்குழுவின் முயற்சிகள் முறியடிக்கப்படும். தேசியத் தலைவரின் சிந்தனையில் கட்டி வளர்க்கப்பட்ட வீரம்செறிந்த தமிழினம் துரோகத்திற்கு துணைபோகாது. தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் அறத்திற்கும், வீரத்திற்கும், பண்பிற்கும் பங்கம் ஏற்படுத்த நினைப்போரை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். துரோகிகளிற்கு தக்க பாடம் புகட்டுவோம். மேதகு பிரபாகரன் சிந்தனை எம்மை சரியான விடுதலைப் பாதையில் வழிநடாத்தும்..

-அனைத்துலக சிந்தனைப்பள்ளி-

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments