தமிழ்நாட்டில் வேகமாக குறைவடையும் தொற்று: கோவை, ஈரோட்டில் தொடர்ந்து உச்சம்!

You are currently viewing தமிழ்நாட்டில் வேகமாக குறைவடையும் தொற்று: கோவை, ஈரோட்டில் தொடர்ந்து உச்சம்!

தமிழ்நாட்டில் கொரோனாத் தொற்று வேகமாக குறைவடைந்து வரும் நிலையில் கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலை காணப்படுகிறது.

நேற்று (ஜூன்-20) மாலை வரையான நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நேற்று மலையுடனான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றுதியானவர்களது எண்ணிக்கை 7 ஆயிரத்து 813 ஆக பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக,

கோயம்பத்தூரில் – 904 பேர்

ஈரோட்டில் – 870 பேர்

சேலத்தில் – 517 பேர்

திருப்பூரில் – 477 பேர்

சென்னையில் – 455 பேர்

ஆகிய மாவட்டங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 24 இலட்சத்து 22 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சிகிச்சை பலனின்றி மேலும் 182 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 197 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 69372 ஆக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments