தம்பி அண்ணா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி!

You are currently viewing தம்பி அண்ணா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி!

தேசப்பற்றாளன் தப்பிஜயா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு சுடர் ஏற்றி மலர்மாணை அணிவித்து மலர்தூவி வணக்கம்செலுத்தப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளரும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு செல்வராஜா கஜேந்திரன், மகளிர் அணித்தலைவியும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினருமாகிய வாசுகி சுதாகர், சட்ட ஆலோசகர்கள் நடராஜா காண்டிபன்,கனகரட்னம் சுகாஷ் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பகிர்ந்துகொள்ள