திடீர் மின்தடை, சாவகச்சேரியில் ஆசிரியைவீட்டுக்குள் ஆயுத முனையில் கொள்ளை!!

You are currently viewing திடீர் மின்தடை, சாவகச்சேரியில் ஆசிரியைவீட்டுக்குள் ஆயுத முனையில் கொள்ளை!!

யாழ்.சாவகச்சேரி – மீசாலை பகுதியில் திடீரென மின்சாரம் தடைப்பட்ட நிலையில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் இடம்பெற்ற சமயம் திடீரென மின்சாரம் தடைப்பட்ட நிலையில், வீட்டின் உரிமையாளராக பெண் ஆசிரியை கதவை திறந்துகொண்டுவீட்டுக்கு வெளியே சாதாரணமாக வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டு முற்றத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் ஆரியையையும் இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்ததுடன் ஆசிரியையின் கணவன் மற்றும் மாமனை கத்தியை காண்பித்து அச்சுறுத்தி வீட்டிலிருந்து தங்க நகைகள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஆசிரியை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments