தினையான் குருவிகள் போல நீங்கள் இயங்கினீர்களென்றால் விடுதலை நிச்சயம்!

You are currently viewing தினையான் குருவிகள் போல நீங்கள் இயங்கினீர்களென்றால் விடுதலை நிச்சயம்!

முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதியுத்ததின் உக்கிரம் ஏறிக்கொண்டிருந்த நாட்களில் இயக்கத்தின் இரண்டாம்நிலை தளபதிகளை தலைவர் சந்திக்கின்றார்.சந்திப்பு இரவு பொழுதில் நடக்கின்றது.சிறுதுளியும் பதட்டமின்றி கண்களில் ஞானத்தீட்சை பெற்றவராய் ஒவ்வொரு சொல்லிலும் நம்பிக்கையின் உயிர்துடிப்பு.

#அண்ணண்_கதைக்கின்றார்

“தினையான் குருவி கண்டிருக்கியளோ வேலிகளில் பூச்செடிகளில் வயல்வெளிகளில் விநாடிக்கு இருமுறை வாலை ஆட்டி சிலிர்ப்பிக்கொண்டு தினைகள் சேகரிக்குமே தினையான் குருவி.குருவி இனங்களிலேயே மிகவும் சிறியது இதுதான்.ஆனால் வெயில் மழை புயல் பாம்பு காற்று இதுபோன்ற தன் எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்து கொள்கின்ற ஏற்பாடுகளை சிறுக சிறுக ஆனால் கச்சிதமாகவும் பிசிரின்றியும் தன்னம்பிக்கையோடும் செய்யும்.நீங்களும் தினையான் குருவிபோல இருங்கள்.

போராட்டம் இன்று மிகவும் பின்னடைவு கண்டிருப்பது உண்மைதான் ஆனால் தினையான் குருவிகளை போல எமது போராட்டத்தையும் எமது மக்களுக்கான வாழ்வையும் மீளக்கட்டியெழுப்புவோம்.எதற்க்கும் அஞ்சாதீர்கள் நாம் எண்ணிக்கையில் மிகச் சிறியவர்களாக இருந்தபோதும் நமது தளராத மனவுறுதிதான் போராட்டத்தை பெரிதாக வளர்த்தது.அதே மனவுறுதியுடன் இருங்கள் பாரதி சொன்ன அக்கினி குஞ்சுகள் போலவும் இருங்கள். நமது வளங்கள் அழிந்து குறுகிவிட்டோமே என்று மனம் தளராதீர்கள்.முக்கியமாக அஞ்சாதீர்கள்.நம்பிக்கை இழக்காதீர்கள்.கொடூரத்தின் உச்சத்தில் நின்று கோரதாண்டவம் புரியும் சிங்கள பேரினவாதக் காட்டை அழிக்க பொந்திடை வைக்கும் சிறு அக்கினி குஞ்சு கானும்.எனென்டால் உண்மையும் நீதியும் வரலாறும் என்றானாலும் நமது பக்கமாய்தான் இருக்கமுடியும்.உடலை மட்டும் கொன்று விடுதலை வேட்கையை கொல்ல முடியாதவர்களை கண்டு ஒருபோதும் அஞ்சாதீர்கள.

தினையான் குருவிகள் போலவும் அக்கினி குஞ்சுகள் போலவும் நீங்கள் இயங்கினீர்களென்றால் விடுதலைப் போராட்டம் நிச்சயம் மீண்டும் துளிர்க்கும்.பீனிக்ஸ் பறவைகள்போல அழிவின் சாம்பல் மேட்டிலிருந்து நாம் உயிர்துடிப்புடன் எழுவோம்.நமக்கு முன்சென்ற மாவீரர்களை விதைத்த போதெல்லாம் அவர்களை நாம் புதைக்கவில்லை விதைக்கின்றோம் என்று சொல்லிதான் விதைத்தோம்.பல்லாயிரம் மாவீரர்களினதும் எவ்வளவோ இடர்களை தாங்கி எம்மோடு நடந்த மக்களதும் தியாகங்கள் வீண்போக முடியாதென நம்புங்கள்.

குறிப்பாக நெருக்கடியான இன்றைய சூழலிலும்கூட நம்மோடே உணர்வு கலந்து நிக்கிற மக்களை நினைக்கதான் வேதனை.விடுதலைக்காக நம் மக்கள் நிறைய விலை கொடுத்துவிட்டார்கள்.அவர்களின் துயரத்தை குறைக்க என்னவெல்லாம் நம்மால் செய்ய ஏலுமோ அனைத்தையும் செய்யுங்கள்.நம்மிடம் உள்ள உலர் உணவு மருந்து பொருட்கள் எல்லாத்தையும் மக்களுக்காய் கொடுத்திட தளபதிமாருக்கு சொல்லிட்டேன்.தமிழ் மக்களது வரலாற்றில் நமக்கு கொடுமைகள் செய்து அவலம் தந்தவர்கள் பலருண்டு ஆனால் ராஜபக்சே சகோதரர்களைபோல. கொடுமை செய்தவர் எவருமில்லை.

இவர்கள் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வர விடுதலைப்புலிகள் இயக்கமும் காரணமாக இருந்ததென்ற குற்றசாட்டு நீங்கள் அறியாதது அல்ல.பின்னோக்கி பார்க்கையில் அக்குற்றசாட்டு உண்மைதான் இயக்கம் அப்படியொரு முடிவினை எடுக்ககாரணம் தனது கொடூர மூர்க்கத்தனத்தினால் தமிழ் ஈழத்திற்கான புறசூழலை ராஜபக்சே அரசு உருவாக்குமென இயக்கம் எதிர்பார்த்தது.ஆனால்இந்தியா_எமக்கெதிராய்_இத்துணை_இறுக்கம்காட்டுமென்றும்_ராஜபக்ஷே_அரசுக்கு_முழுபக்கபலமாய்_இருக்குமென்றும் இயக்கம் எதிர்பார்க்கவில்லை.எமது மக்களின் வாழ்வுக்கு இந்தியா எவ்வளவு முக்கியமென்பதை இப்போதும் நாம் உணர்ந்திருக்கின்றோம்.சிங்கள பேரினவாதம் எத்துணை கபடமும் போலித்தனமும் கொண்டது என்பதை இந்தியா உணர்ந்து வருத்தபடுகின்றநாள் நிச்சயம் வரும்.

இப்ப இங்க நிக்கிற நீங்களென்டல்ல இயக்கத்தின் எல்லா போராளியையும் என் சொந்த பிள்ளைகளாகதான் வளர்த்தேன்.பல்லாயிரம் போராளிகளை நாம் இந்த விடுதலைக்கு ஈகம் செய்தோம்.அதைவிட பெரிய நம்மக்கள் செய்த தியாகங்கள் எதையும் நம்மறக்கமுடியாது.அந்த சகலபேரது நினைவுகளின்ட புனிதசுமையை உங்க தோளிலதான் நான் நம்பிக்கையோடு வைக்கிறேன்.உயிரை கொடுக்க அச்சமில்லை என்ற தியாகமும் உறுதியும்தான் போராட்டத்தை வளர்த்தது அதே உறுதியுடன் முன் செல்லுங்கள் வரலாறு நமக்காக மீண்டும் வரும்.

இருநூறு வருடங்களுக்குமுன் பண்டாரக வன்னியன் இதே நிலத்தில்தான் விடுதலைப்போர் புரிந்தார் இதே முல்லைத்தீவில் வெள்ளைகாரன்ட கோட்டையை தகர்த்தார்.ஆனால் துரோகி காக்கை வன்னியனால் காட்டிக்கொடுக்கப்பட்டு கற்சிலைமடுவில் வீரகாவியமானார்.அன்று தரையில் விழுந்த பண்டாரகவன்னியனின் வாள் மண்முடி கூர்மழுங்கி துருப்பிடித்து இனிமேல் யாரும் பயன்படுத்தமுடியாது எனுமளவிற்கு ஆகிகிடந்தது.தமிழனின் வீரத்தை பறைசாற்றிய வீரத்திற்க்கு எடுத்துக்காட்டாக இருந்த அந்த வாளை இருநூறு ஆண்டுகளாக ஒருவரும் தொடவுமில்லை ஏறெடுத்துப் பாக்கவுமில்லை.

துருப்பிடித்து கூர்மழுங்கி கிடந்த அந்த வாளை இருநூறு ஆண்டுகளுக்குபின் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் துணிவுடன் கையிலெடுத்தது இலட்சியஉறுதி இடைவிடாது பயிற்சி தியாகம் என நினைத்து பார்க்க முடியாத ஈகங்களால் அந்தவாளை பட்டைதீட்டி மேலும் கூர்செய்து பளபளக்கும் போர்வாளாக அதை உயர்த்தியது.தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமே அந்த போர்வாள் அது உறையில் கிடக்கவுமில்லை தரையில் விழவுமில்லை இனியும் உயர்த்தி பிடித்தபடி களமாடுங்கள் தமிழர்கள் அனைவருக்குமான போர்வாளாக நான் இதை தருகின்றேன் இனி இது கீழே விழக்கூடாது துருப்பிடித்துவிடக்கூடாது அந்த புனித கடமையை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.

இதே மண்ணில் 15ஆண்டுகளுக்கு முன் நாம் நடத்திய காட்டிய வரலாறு மீண்டும் வரும்.தினையான் குருவிகளைபோல அமைதியான உழைப்பும் அக்கினி குஞ்சுகளை போல அகத்தே நெருப்பும் சுமந்து தணிந்து போகாத விடுதலை தாகத்துடன் இயங்கினீர்களென்டால் புலிகளின் படை மீண்டும் முல்லைதீவில் தரையிறங்கும். நான் உங்களோடுதான் இருக்கின்றேன்.
தேசியத்தலைவர்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments