திருகோணமலைக்கு வந்த அமெரிக்க கடற்படைக் கப்பல்!

You are currently viewing திருகோணமலைக்கு வந்த அமெரிக்க கடற்படைக் கப்பல்!

கடந்த 11ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்கக் கடற்படையின் சால்ர்ஸ்டன் 18 என்ற கப்பல் நேற்றுமுன்தினம் புறப்பட்டுச் சென்றுள்ளது. சுமார் 127.4 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பலில் 100 பேர் பயணித்துள்ளனர்.

திருகோணமலை துறைமுகத்தை வருகை தந்த கப்பலின் கட்டளை அதிகாரி, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியைக் கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் சந்தித்துள்ளார்.

சுமுகமான கலந்துரையாடலின் போது, இருவரும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments