திருகோணமலையில் கப்பலில் சென்ற 17 இந்தியர்களுக்கு கொரொனா!

You are currently viewing திருகோணமலையில் கப்பலில் சென்ற 17 இந்தியர்களுக்கு  கொரொனா!

திருகோணமலை துறைமுகத்துக்கு சென்ற கப்பலொன்றில் 17 இந்தியப் பிரஜைகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை துறைமுகத்தில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு கப்பல் எரிபொருளை கொண்டு செல்வதற்காக வருகை தந்துள்ளது.

தற்போது கப்பலில் ஊழியர்கள் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பில் உள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான 17 இந்தியப் பிரஜைகள் தொடர்பாக எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகிறது.

பகிர்ந்துகொள்ள