திருகோணமலை – ஈச்சிலம்பற்று பூநகர் பகுதியில் இளைஞன் பலி!

You are currently viewing திருகோணமலை – ஈச்சிலம்பற்று பூநகர் பகுதியில் இளைஞன் பலி!

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பூநகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நபர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த இவர்கள் திருகோணமலைக்கு வந்து நேற்றுமுன்தினம் மாலை மீண்டும் மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின்கம்பத்துடன் மோதியதிலேயே விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்விபத்து சம்பவத்தில் மட்டக்களப்பு, செங்கலடி, கணபதிப்பிள்ளை நகரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் மதுசாந் வயது (22) என்ற நபரே உயிரிழந்துள்ளதாக ஈச்சிலம்பற்று சிறீலங்கா பொலிஸார் தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments