திருகோணமலை சந்தை மூடப்பட்டுள்ளது!

You are currently viewing திருகோணமலை சந்தை மூடப்பட்டுள்ளது!

திருகோணமலையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்கள் 06இற்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை பொதுச் சந்தை பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களால் மூடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்த 59 பேரிடம் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த நபர்கள் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுவந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை வெளியாகிய முடிவுகளின் அடிப்படையில் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த மூவர் தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், உப்புவெளி மற்றும் புல்மோட்டை பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவர் ஆகியோர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் திருகோணமலை மீன் சந்தை மூடப்பட்டுள்ள அதேவேளை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

பகிர்ந்துகொள்ள