திருச்சி சிறப்பு முகாமில் நீண்ட காலமாக சிறைவைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழ் அகதிகள் 16 பேர் இன்று தமிழக அரசால் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்கள். தங்களின் விடுதலைக்காக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட அறவளிப்போராட்டமும் அற்பணிப்பும் தமிழக உறவுகளின் போராட்டங்களும் ஊடகங்களின் அழுத்தங்களும் இன்று 16 ஈழத்தமிழர்களை விடுதலைசெய்வதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தாயகம் செல்ல விரும்புபவர்களை இம்மாத இறுதியில் அனுப்பிவைக்க இருப்பதாகவும் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த விடுதலை அறிவிப்பானது ஈழத்தமிழர் அகதிகளின் உறவினர்களையும் உலகத்தமிழ் உறவுகளையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்தியுள்ளது.
திருச்சி சிறப்பு முகாம் ஈழத்தமிழர் அகதிகள் 16பேர் விடுதலை தமிழக அரசிற்கு நன்றிகள்!
