திருமலையில் தொற்று தீவிரம் – அன்புவழிபுரம், உவர்மலை முடக்கம்!

You are currently viewing திருமலையில் தொற்று தீவிரம் – அன்புவழிபுரம், உவர்மலை முடக்கம்!

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் உவர்மலை மற்றும் அன்புவழிபுரம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகள், நேற்று மாலை 6.00 மணி முதல் முடக்கப்பட்டதுடன் குறித்த பகுதியினை வதிவிடமாகக் கொண்டவர்கள் மாத்திரம் உள்நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, இந்தப் பகுதிகள் முடக்கப்படுவதாக முன்னரே அறிவிக்காததால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியனர். நேற்று தொழிலாளார் தின விடுமுறை காரணமாக வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததால் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் சிரமம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments