திலீபனின் நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுக்கு கடற்தொழிலுக்கு செல்வதனை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அழைப்பு!

You are currently viewing திலீபனின் நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுக்கு கடற்தொழிலுக்கு செல்வதனை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அழைப்பு!

யாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுக்கு ஆதரவளிக்கும் வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை கடற்தொழிலுக்கு செல்வதனை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம் இந்த அழைப்பை விடுத்துள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு கோரி இந்திய அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் திலீபன் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்க்கொடை வழங்கிய நாள் நாளை  திங்கட்கிழமை 35ஆவது ஆண்டாக முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு ஆதரவளிக்கும் வகையில் யாழ்ப்பபாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை கடற்தொழிலுக்கு செல்வதனைத் தவிர்க்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments