தீப்பந்தம் ஏந்தி போராட்டம்!!

You are currently viewing தீப்பந்தம் ஏந்தி போராட்டம்!!

சிறீலங்காவில் அதிகரித்துள்ள பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் தீ பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி, நேற்றூ(24) நள்ளிரவு மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பித்த தீ பந்த போராட்டம் காங்கேசன்துறை வீதியின் ஊடாக சென்று சுன்னாகம் சந்தியில் நிறைவடைந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் காங்கேசன்துறை தொகுதி அமைப்பாளர் வன்னியசிங்கம் பிரபாகரனின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.மேலும் குறித்த தீ பந்த போராட்டத்தில் விவசாயிகளும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதேவேளை

தீப்பந்தம் ஏந்தி போராட்டம்!! 1

புத்தளம்– கற்பிட்டி,ஏத்தாளை,கஜூவத்தைப் பகுதியில் தீப்பந்தங்கள் ஏந்தி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மக்கள் விடுதலை முண்ணனியின் ஏத்தாளை வட்டார அமைப்பாளர் எம்.சி.எம்.அஸ்லம் தலைமையில் இன்று மாலை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மூவின மக்களும் கலந்துகொண்டனர்.

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், எரிவாயு, பால்மா என்பவற்றுக்கு நிலவும் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையேற்றம் என்பவற்றைக் கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தீப்பந்தம், எரிவாயு சிலிண்டர், பாண் என்பனவற்றை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது,’அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறையுங்கள்’ அடிக்காதே அடிக்காதே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே’,’எரிவாயு பிரச்சினைக்குத் தீர்வைத் தாருங்கள்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களையும் எழுப்பினர்.

அத்துடன்,மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments