தீர்மானத்தில் இருந்து எந்த நாடும் வெளியேற முடியாது!

You are currently viewing தீர்மானத்தில் இருந்து எந்த நாடும் வெளியேற முடியாது!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து எந்தவொரு நாடும் வெளியேற முடியாது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைய பேச்சாளர் ரொனால்டோ கோமிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவை இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட நல்லிணக்கம் தொடர்பான யோசனையின் இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக இலங்கை கடந்த வாரம் அறிவித்தது.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் ஒழுங்குவிதிகளின்படி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில் இருந்து நாடு ஒன்று வெளியேற முடியாது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைய பேச்சாளர் ரொனால்டோ கோமிஸ் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில் இணை அனுசரணையாளராக சேர்ந்து கொள்வதற்கு நாடுகளுக்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் வெளியேற முடியாது.’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

பகிர்ந்துகொள்ள