துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக தலைவர் உட்பட இருவர் பலி: வெளியான காரணம்

You are currently viewing துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக தலைவர் உட்பட இருவர் பலி: வெளியான காரணம்

பாதாள உலகக் குழு உறுப்பினர் தொன் ரொஷான் இந்திக்க எனப்படும் “மன்னா ரொஷான்” மற்றும் அவரது உதவியாளர் ஒருவரும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

பாதுக்க துந்தான, வெந்தேசிவத்த பிரதேசத்தில் வைத்து இன்று (25) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.

“மன்னா ரோஷான்” மற்றும் அவரது உதவியாளரின் சடலங்கள் இன்று அதிகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன.

தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள லலித் கன்னங்கரவிடம் இருந்து போதைப்பொருள் பெறுவதற்காகவே இவர்கள் குறித்த பகுதிக்கு சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், லலித் கன்னங்கரவின் வழிகாட்டுதலின் பேரில் இந்தக் கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட மன்னா ரொஷான், ஹங்வெல்ல நிரிபொல பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments