தென்னம் ஓலையால் மறைப்பு கட்டி கசிப்பு காச்சியவர் கைது!

You are currently viewing தென்னம் ஓலையால் மறைப்பு கட்டி கசிப்பு காச்சியவர் கைது!

வீட்டுக்காணிக்குள் தென்னம் ஓலையால் மறைப்பு கட்டி கசிப்பு காச்சியவர் கைது!

புதுக்குடியிருப்பு தேவிபுரம் வீட்டுக்காணியில் கசிப்பு காச்சப்படுவதாக நீண்டகாலமாக சட்டவிரோதமாக கசிப்பு காச்சிவருகின்றமை தெரியவந்துள்ளது.

இன்னிலையில் இன்று 24.06.2020 காலை குறித்த பகுதிக்கு சென் காவல்துறை குழுவினர் வீட்டு காணிக்குள் தென்னை ஓலைகள் கொண்டு சுற்றிவர மறைப்பு கட்டப்பட்டு அந்த இடத்தில் சட்டவிரோத கசிப்பு காச்சி வந்த நபர் ஒருவரை கைதுசெய்துள்ளார்கள்.

இதன்போது 20 லீற்றர் கசிப்பும், 180 லீற்றர் கோடாவும் மற்றும் கசிப்பு காச்ச பயன்படுத்தப்படும் பானைகள்,வயர்கள் பெரல்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன

பகிர்ந்துகொள்ள