தென்னிலங்கையில் 2 பேர் சுட்டுக்கொலை!

You are currently viewing தென்னிலங்கையில் 2 பேர் சுட்டுக்கொலை!

தென்னிலங்கையில் ஒரே நாளில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இந்தச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கம்பஹா – கந்தானை பிரதேசத்தில் நேற்று (30.07.2023) இரவு முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கந்தானையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயது நபரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.

தனது முச்சக்கரவண்டியில் வீடு திரும்பிய குறித்த குடும்பஸ்தர் வீட்டு வாசலில் வைத்துச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், முச்சக்கரவண்டி சாரதியைச் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர் என்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதியின் சடலம், கந்தானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு, வாழைத்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் நேற்று (30.07.2023) மாலை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments