தென் கொரியாவில் படை வீரராக பணியாற்றி வந்த அமெரிக்க ராணுவ வீரர் ரஷ்யாவில் கைது!

You are currently viewing தென் கொரியாவில் படை வீரராக பணியாற்றி வந்த அமெரிக்க ராணுவ வீரர் ரஷ்யாவில் கைது!

தென் கொரியாவில் படை வீரராக பணியாற்றி வந்த அமெரிக்க ராணுவ சார்ஜண்ட் கார்டன் (Gordon Black) பிளாக், திருட்டு பேரில் ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது . பிளாக் மே 2 ஆம் திகதி ரஷ்யாவின் கிழக்கு முனையிலுள்ள விளாடிவோஸ்டாக் நகரில் பிளாக் கைது செய்யப்பட்டதாகவும், அவர் அதிகாரபூர்வ பயணத்தில் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“இந்த சம்பவம் மற்றும் ரஷ்யாவை தொடர்புபடுத்தும் பிற விஷயங்கள் குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம்,” என்று தேசிய பாதுகாப்பு சபை செய்தித் தொடர்பாளர் ஜான் கர்பி கூறினார்.

மேலதிக தகவல்களை அவர் வெளியிடவில்லை. பிளாக் மீதான துவக்க குற்றச்சாட்டை அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆதரிப்பதாகவும், வெளியுறவுத் துறை ரஷ்யாவில் தூதரக உதவிகளை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBS செய்தி நிறுவனத்தின் தகவல்படி, பிளாக் தென் கொரியாவிலிருந்து டெக்சாஸ் மாநிலத்தின் கவசோஸ் என்ற தனது புதிய பணி இடத்திற்கு இடம் மாற்றப்படும் செயல்பாட்டில் இருந்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments