தெல்லிப்பழையில் மரம் தறித்தவர் மரத்தின் கீழ் சிக்கி பரிதாப மரணம்!

You are currently viewing தெல்லிப்பழையில் மரம் தறித்தவர் மரத்தின் கீழ் சிக்கி பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை காவல்த்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தொழில் நிமித்தம் மரம் தறித்தவர் ஒருவர் அதே மரத்தின் கீழ் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

தெல்லிப்பழை, மாசியப்பிட்டி பகுதியில் தொழில் நிமித்தம் நால்வர் சேர்ந்து மரம் ஒன்றைத் தறித்துள்ளனர்.

அதன் போது மரம் வீழ்ந்தபோது அதன் கீழ் சிக்கிய சூழாம்பதி, தெல்லிப்பழையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான எட்வேட் மதிவண்ணன் (வயது 41) என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். அருவிஅவர் உடனடியாக தெல்லிபழை வைத்தியசாலைக்கு கொண்டு அருவி செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி கடந்த இரவு 8மணியளவில் உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலைத் தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண விசாரணையின் பின்னர் அவருடைய சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை தெல்லிபழை சிறீலங்கா காவல்த்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments