தேர்தல் மூலமே ஒற்றையாட்சிக்குள் முடக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

You are currently viewing தேர்தல் மூலமே ஒற்றையாட்சிக்குள் முடக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

தேர்தல் மூலமே மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த உள்ளூராட்சி தேர்தல் மற்றவர்கள் கூறும் சாதாரண பாணியில் இத் தேர்தல் அபிவிருத்திககான தேர்தல் அல்ல. மக்களும் தமது ஊரின் அபிவிருத்தியை நோக்காக கொண்டே வாக்களிப்பார்கள்.

தேர்தல் நிறைவடைந்த பின் ஒவ்வொரு தரப்பும் மக்களின் உள்ளூராட்சி தேர்தல் ஆணையை வைத்துக்கொண்டு தேசிய ரீதியில் எமக்கு ஆணை கிடைத்துவிட்டது என்ற நோக்கில் தம் நிலைப்பாட்டை செயற்படுத்த தயாராக உள்ளனர்.

கடந்த 2018 தேர்தல் முடிவை அடிப்படையாகக்கொண்டு செயற்பட்டு ரணில் விக்ரமசிங்காவுடன் இணைந்து ஒற்றையாட்சிக்குள் இணைந்த தீர்வை முன்வைக்க முயன்றதை மறந்துவிடக் கூடாது.

அந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்னடைவை சந்தித்ததால் மக்கள் ஒற்றையாட்சி முறைக்குள் முடக்கும் நிலை தவிர்க்கப்பட்டது.

இன்று தமிழர் தரப்பு என கூறுபவர்கள் தீர்வுத் திட்டமெனக் கூறி ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குவதற்காக வேலைகளை முன்னெடுக்கின்றார்கள்.

இதற்கு மேலாக எதி்வரும் தேர்தலில் கிடைக்கும் வாக்குகளையும் தமக்கான ஆணையாக எடுத்து ஒற்றையாட்சி முறைக்குள் முடக்க முயற்சிசெய்து கொண்டிருக்கின்றார்கள்.

இத் தரப்பிற்கு மக்கள் ஆணையை வழங்கிவிட்டால் எதிர்காலத்தில் ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்காக வேலைத்திட்டம் அதி தீவிரப்படுத்தப்பட்டுவிடும் என்பதை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

இன்று காலை மேற்கத்தேய தூதுவர் தமிழர் பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்தில் சந்தித்திருந்தார். இதில் தமிழ்க் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுரேஸ் பிரேமச்சந்திரன் பங்கெடுத்திருந்தார்.

தூதுவர் அந்த நேரத்தில் அரசு தமிழர்களுக்கு தேவையான அடிப்படை விடயம் தொடர்பாக வினாவிய போது அதற்கு கூலிப்படை முன்வைத்த கருத்து 13 ம் திருத்தச்சட்டமாகவே இருந்தது.

அந்த இடத்தில் நான் மாற்றுக்கருத்தை முன்வைப்பதற்கு தள்ளப்பட்டேன். இவர்கள் ஒவ்வொருவரும் ஒற்றையாட்சியை நிராகரித்து சமஷ்டி தீர்வு என வாக்குகளை பெற்றுவிட்டு இவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒற்றையாட்சி முறைக்கு ஆமோதிக்கும் நிலையைத் தொடர்ந்தவண்ணமுள்ளனர்.

இனத்தை விற்றுக்காண்டிருக்கும் இவ்வாறனவர்களுக்கு வாக்களிப்பதானது ஈபிடிபி மற்றும் கருணா கும்பலுக்கு வாக்களிப்பதற்கு சமனானதாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் 13 ம் திருத்தச்சட்டம் என்ற பேச்சே இருக்கவில்லை. தற்போது இனப்படுகொலை என்பது தொடர்பிலும் கருத்திலெடுக்காமல் ஒற்றையாட்சிக்கு துணைபோகும் நிலை காணப்படுகின்றது. ஆகவே இவை அனைத்திற்கும் தேர்தல் மூலமே மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments