தொடரும் கொரோனா விதிமுறை மீறல்கள்!!

You are currently viewing தொடரும் கொரோனா விதிமுறை மீறல்கள்!!

கடந்த 24 மணிநேரத்தில் ஒஸ்லோவில் 80 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில் கொரோனா விதிமுறைகளை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 12 பேருக்கு காவல்த்துறை முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பக்கத்து வீட்டார்களின் முறைப்பாடுகளை அடுத்து சம்பவ இடமான Nydalen இற்கு காவல்த்துறையினர் சென்றபோது கூடுதலான சத்தத்துடன் கொண்டாட்டத்தில் இளையவர்கள் ஈடுபட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை கொரோனா தொற்று சட்டவிதிமுறைகளை மீறியதற்காக வழமைபோன்று அபராதப்பணம் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள