நடுவானில் திடீரென தீப்பிடித்த ரஷ்ய இராணுவ விமானம் – 15 பேர் பலி!

You are currently viewing நடுவானில் திடீரென தீப்பிடித்த ரஷ்ய இராணுவ விமானம் – 15 பேர் பலி!

ரஷ்யாவின் இராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் 15 போர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த விமான விபத்து நேற்று (12.3.2024) ரஷ்யாவின் தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. விமானம் புறப்படும் போது என்ஜினில் தீப்பற்றியது தான் விபத்துக்கு காரணம் என்று ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விமானப்படை தளத்தில் இருந்து விமானம் டேக் ஆப் ஆன சில வினாடிகளில், அதன் என்ஜினில் இருந்து கரும்புகை எழுந்துள்ளது.

பின்னர் தீப்பற்றியது. இதன் காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியது.

விமானம் புறப்படும்போது என்ஜினில் தீப்பற்றியது தான் விபத்துக்கு காரணம் என்று ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் விபத்து சம்பவிக்கும் போது விமானத்தில் 8 ஊழியர்கள், 7 பயணிகள் என மொத்தம் 15 பேர் பயணித்தனர்

விமானத்தில் இருந்தவர்களில் ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments