நல்லூர் திருவிழா உற்சவ கட்டுப்பாடுகள் தளர்வு மகிந்த உத்தரவு!

You are currently viewing நல்லூர் திருவிழா உற்சவ கட்டுப்பாடுகள் தளர்வு மகிந்த உத்தரவு!

நல்லூர் உற்சவத்தின்போது விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளை தளர்த்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவசர உத்தரவிட்டுள்ளார்.கோவில் தர்மகர்த்தா ஷான் குமாரதாஸ், நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு கலந்துரையாடியதன் பின்னரே பிரதமர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். நல்லூர் உற்சவத்தின்போது 50 பேர் மட்டும்தான் கலந்துகொள்ளலாம் எனக் கட்டுப்பாடு எதனையும் விதிக்காமல், வரக்கூடிய பக்தர்கள் சமூக இடைவெளியைப் பேணி – இடையூறுகள் இல்லாமல் வழிபாடுகளை மேற்கொள்வதற்கான பொறிமுறை ஒன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.  

வரலாற்றுப் பெருமை மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் கோவில் தர்மகர்த்தா ஷான் குமாரதாஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை நேற்றுக் காலை தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு அதற்கான ஏற்பாடுகளில் எதிர்கொள்ளப்படும் நெருக்கடிகள் குறித்துப் உரையாடியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள