நவம் அறிவிக்கூட வளாகத்தில் கொரோனா மருத்துவமனை!

You are currently viewing நவம் அறிவிக்கூட வளாகத்தில்  கொரோனா மருத்துவமனை!

கிளிநொச்சியில் போருக்கு முன்னர் நவம் அறிவிக்கூடாம் அமைந்துள்ள வளாகத்தில் கொரோனா மருத்துவமனை அமைக்கப்பட்டு இன்று சிங்கள படைதளபதியும் போர்க்குற்றவாளியுமான சவேந்திரசில்வா பார்வையிட்டுள்ளார்.

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் (விடுதலைப்புலிகளின் நவம் அறிவு
கூடம் கட்டடதொகுதி) அமைக்கப்பட்டு வருகின்ற கொரோனா வைத்தியசாலைகளின்
பணிகளை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நேரில்
சென்று பார்வையிட்டுள்ளார்.

இன்று (31) மாலை 4.30 மணியளவில் கிளிநொச்சி கொரோனா
வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட இராணுவத் தளபதி மிக வேகமாக
முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கொரோனா சிகிச்சை நிலையத்தின் பணிகளை
பார்வையிட்டுள்ளதோடு, நிலைமைகள் தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி
சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சரவணபவனிடம்
கேட்டறிந்து கொண்டார்.

பகிர்ந்துகொள்ள