நாடளாவிய திடீர் மின் தடை – இருளில் மூழ்கியது இலங்கை!

You are currently viewing நாடளாவிய திடீர் மின் தடை – இருளில் மூழ்கியது இலங்கை!

பல மணிநேரங்களாக, இலங்கை முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டிருந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கொத்மலையில் இருந்து பியகம வரையிலான பிரதான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று பிற்பகல் 5 மணியளவில் நாடளாவிய ரீதியில் மின்சாரம் விநியோகம் தடைப்பட்டது.

திடீர் மின்தடையினால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். குடிநீர் விநியோகமும் தடைப்பட்டது.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் 80% மின்சார விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை நள்ளிரவில் தெரிவித்துள்ளது.

எஞ்சியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான சீரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments