நாளையும் வவுனியாவில் போராட்டம்!

You are currently viewing நாளையும் வவுனியாவில் போராட்டம்!

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற பொலிசாரின் வன்முறையினை கண்டித்தும் கைதான எட்டு பேரையும் விடுவிக்க கோரியும் நாளை வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது. இந்த போராட்டத்துக்கான அழைப்பினை கைது செய்யப்பட்ட உறவுகளால் விடுக்கப்பட்டுள்ளது . இதன் போது கருத்து தெரிவித்த தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில்

ஒருவரான நரேந்திரனின் மனைவி தனுசியா விடுத்த போராட்ட அழைப்பில் தனது கணவர் உட்பட எட்டு பேரும் எதிர்வரும் பத்தொன்பதாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர் .இவர்களில் ஐந்து பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்

இவர்கள் உண்ணாவிரதம் இருக்கவில்லை என்று கூறிய விடயம் முற்றுமுழுதாக பொய்யான விடயம் என்பதை நான் இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன் இவர்களின் விடுதலையை வலியுறுத்தி நாளை பாதிகப்பட்ட உறவுகள் சார்பில் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறோம்

எமது உறவுகள் வெளியில் வருவதற்கும் நாங்கள் துன்பத்தில் இருந்து மீள்வதற்குமாக அனைவரும் அணிதிரள்வீர்கள் என கண்ணீருடன் கேட்டுக்கொண்டுள்ளார்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments