நிதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பசில் பதவி ஏற்றார்!

You are currently viewing நிதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பசில் பதவி ஏற்றார்!

பொதுஜன முன்னிணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச சற்று முன்னர் பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் 9.15 மணிக்கு நாடாளுமன்றத்தில் அவர் பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

முதற்கட்டமாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற அவர் பின்னர் நிதியமைச்சராக பதவி ஏற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை

மூளை நோய்வாய்ப்பட்ட தமிழ்ச்சமூகத்தில் வளர்ந்த புல்லுருவிகள்

கலாநிதி யோகராஜன் அறக்கட்டளை அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் இன்று மதியம் சுப நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினராக பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்யவுள்ள ஜனாதிபதியின் சகோதரன் பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட பூசை வழிபாடு இடம்பெறுகிறது.

இந்து பௌத்த கிறிஸ்தவ மதகுருக்களின் பங்குபற்றுதலுடன் பசில் ராஜபக்சவிற்கு ஆசி வேண்டி விசேட பூசை வழிபாடு இடம்பெற்றுள்ளது..

ராஜபக்சா குடம்பத்தால் தமிழ்மக்கள் வகைதொகையின்றி இனஅழிப்புக்கு உள்ளாகி இருக்கையில் சில மானமிழந்ததுகளின் துர்நாற்றங்களினால் மக்கள் விசனம் அடைந்துள்ளன் என்பது குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments