நீதி கேட்கும் வரை போர் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

You are currently viewing நீதி கேட்கும் வரை போர் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக் கேட்கும் வரைக்கும் போர் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இனப்படுகொலையே நடந்தது என்று பாதிக்கப்பட்ட மக்கள் சொல்கின்றோம். இதனை ஏற்றுக்கொள்ள உலகம் தயாராக இருக்கின்றது.

இந்த இடத்தில் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள்தான் இதனை செய்திருக்கவேண்டும்

இவ்வாறான நிலையில், போர்குற்றவாளியினை குற்றவாளி கூண்டில் ஏற்றாமல், போர்க்குற்றவாளிகள் தப்பிக்க முயல்கின்ற நிலை அதாவது பாதிக்கப்பட்ட மக்கள் நீதியினை கேட்கும் வரைக்கும் குற்றாவாளிகள் தப்பிக்கமுடியாது.

தமிழர்கள் எந்தளவிற்கு இந்த விடயத்தில் அழுத்தம் கொடுக்கின்றோமோ, அந்தளவிற்கு குற்றவாளிகளுக்கு நெருக்கடியினை ஏற்படுத்தி தமிழர்களுடன் புரிந்துணர்வுக்கு வரும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்” என மேலும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள