நீீரில் அடித்தச் செல்லப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு

You are currently viewing நீீரில் அடித்தச் செல்லப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு

வாழைச்சேனை சிறீலங்கா காவற்துறை பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை  (12)  நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் இன்று சனிக்கிழமை  (13) காலை 7.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நண்பர்களுடன் நீராடச் சென்ற வாழைச்சேனை கோழிக்கடை வீதியைச் சேர்ந்த  17 வயதுடைய  இளைஞனே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.

நேற்று (12) கல்குடா சுழியோடிகள் தேடுதல் மேற்கொண்ட போதும் இளைஞன் மீட்கப்படாத நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

இவ் விடயம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு, மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments