பண்ணை பாலத்தில் விபத்து – இளைஞன் பலி!

You are currently viewing பண்ணை பாலத்தில் விபத்து – இளைஞன் பலி!

யாழ்ப்பாணம்- பண்ணை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்ணை பாலத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் கொக்குவில் கிழக்கை சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும் இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண சிறீலங்கா காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments