பயங்கரவாத தடைச்சட்ட கைதுகள்! – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கவலை!

You are currently viewing பயங்கரவாத தடைச்சட்ட கைதுகள்! – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கவலை!

தமிழர்கள் அமைதியான முறையில் மேற்கொண்ட நினைவுகூரலிற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கையின் வடக்குகிழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டமை குறித்தும் தமிழ் மக்கள் நினைவுகூரலை முன்னெடுப்பதை தடுப்பதற்கு குழப்புவதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கபிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் பில் ஜோன்சன் தெரிவித்துள்ளார்

அனைத்து மக்களினதும் சிவில் மனித உரிமைகளை நிலைநாட்டுமாறு நான் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையின் வடக்கு கிழக்கில் தங்களுடைய அமைதியான நினைவுகூரல்களின் போது தமிழர்கள் கைதுசெய்யப்பட்டமை குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த கைதுகள் தமிழர்களின் நினைவுகூறல்களை தடுக்க முயலும் இலங்கை பொலிஸாரின் வரலாற்றின் தொடர்ச்சியே என அவர் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments