பயங்கர வாள்களுடன் யாழில் இளைஞர்கள் இருவர் கைது!!

You are currently viewing பயங்கர வாள்களுடன் யாழில் இளைஞர்கள் இருவர் கைது!!

யாழ்.சுண்டுக்குளி பகுதியில் இருவர் குற்றத்தடுப்பு காவல்த்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து வாள்களும் மீட்கப்பட்டிருக்கின்றது.

நேற்று ஞாயிற்று கிழமை சுண்டுக்குழி பகுதியில் காவல்த்துறையினர் நடத்திய திடீர் சோதனையின்போது பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.  

கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 33 வயதுடையவர்கள் என்பதுடன், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரு வாள்களும் மீட்கப்பட்டிருக்கின்றது.

பகிர்ந்துகொள்ள