யாழ் சித்தங்கேணியில் வீடு உடைத்து பத்து பவுண் கொள்ளை!

You are currently viewing யாழ் சித்தங்கேணியில் வீடு உடைத்து பத்து பவுண் கொள்ளை!

யாழ்.சித்தங்கேணி பகுதியில் பூட்டியிருந்த வீட்டை திறந்து 10 பவுண் நகை மற்றும் 9 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

குறித்த சம்பவம் நேற்று காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்குமிடையில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

வீட்டில் உள்ளவர்கள் இன்று முற்பகல் கோயிலுக்கு வானில் சென்றுள்ளனர். முன்னர் திட்டமிட்டதன் பிரகாரம் குடும்பத்தலைவர் வீட்டில் இருப்பார் என்ற அடிப்படையில் 

வீட்டை பூட்டி திறப்பை வீட்டுக்கு வெளியில் உள்ள சுவாமிப்படத்தில் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். எனினும் கடைசி நேரத்தில் அவரும் கோயிலுக்குச் சென்றுள்ளார்.

கோயிலிருந்து மாலை 4 மணியளவில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 10 பவுண் தங்க நகைகளும் 

9 ஆயிரம்ரூபாய் பணமும் திருட்டப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்வில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

பகிர்ந்துகொள்ள