பரிஸ் : நாளை மகிழுந்துகளுக்கு தடை!

You are currently viewing பரிஸ் : நாளை மகிழுந்துகளுக்கு தடை!

நாளை பரிசில் மகிழுந்துகள் அற்ற நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை செப்டம்பர் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரிசில் மகிழுந்துகளுக்கு தடை விதிக்கப்ப்ட்டுள்ளது. சுற்றுச் சூழல் மாசடைவு மற்றும் புவி வெப்பமடைதல் போன்ற காரணங்களுக்காக இந்த நிகழ்வினை பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ கொண்டுவந்துள்ளார்.

காலை 11 மணியில் இருந்து மாலை 6 மணிவரை பரிசில் மகிழுந்துகள் செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ‘Car-Free’ நாளில் மகிழுந்துகள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏழாவது தடவையான இந்த நிகழ்வு நாளை இடம்பெற உள்ளது.

சுற்றுலாப்பயணிகளின் பேருந்துகள், மகிழுந்துகள் விமான நிலையம் நோக்கி பயணிக்கும் மகிழுந்துகளுக்கு அனுமதி உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.  

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments