இலங்கையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான தகவல்!

You are currently viewing இலங்கையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான தகவல்!

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் பாடசாலைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கோவிட் 19 காரணமாக முன்னர் திட்டமிடப்பட்டபடி 2ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஏப்ரல் 20 ஆம் திகதிக்குள் மீண்டும் ஆரம்பிக்க முடியுமா என்பது நிச்சயமற்றது” என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் பாடசாலைகளை மீண்டும் திறப்பு தொடர்பாக சுகாதார அதிகாரிகளை கலந்தாலோசிக்க கல்வி அமைச்சு தற்போது முடிவு செய்துள்ளது.

பகிர்ந்துகொள்ள