பாம்பு தீவில் இருந்து ரஷ்ய படையை வெளியேற்றிய உக்ரைன் வீரர்கள்!

You are currently viewing பாம்பு தீவில் இருந்து ரஷ்ய படையை வெளியேற்றிய உக்ரைன் வீரர்கள்!

கருங்கடலில் உள்ள பாம்பு தீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறிய நிலையில் அங்கு உக்ரைன் தேசிய கொடியை அந்த நாட்டு வீரர்கள் ஏற்றியுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் பிறகு கருங்கடலில் உள்ள பாம்பு தீவை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்தனர். அத்துடன் பாம்பு தீவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த உக்ரைனிய வீரர்களை உடனடியாக சரணடையுமாறு ரேடியோ மூலம் கெடு கொடுத்து ரஷ்ய படையினர் உத்தரவிட்டனர்.

ஆனால் ரஷ்ய படையின் உத்தரவை மதிக்காத உக்ரைனிய வீரர்கள் அவர்களுக்கு எதிராக ரேடியோவில் திட்டித் தீர்த்தனர்.

இதனால் பாம்பு தீவில் இருந்த உக்ரைனிய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், ஆனால் ரஷ்ய வீரர்களை திட்டி ரேடியோவில் உக்ரைனிய வீரர்கள் பேசிய ஆடியோ உலக அளவில் மிகவும் வைரலானது.

பாம்பு தீவை ரஷ்ய படைகள் கைப்பற்றி இருந்தாலும், அதை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்ற நோக்கில் உக்ரைன் தொடர் வான் தாக்குதலை நடத்தி வந்தது.

இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில் பாம்பு தீவில் இருந்து வெளியேறுவதாக ரஷ்யா அறிவித்ததை தொடர்ந்து, ரஷ்ய வீரர்கள் பாம்பு தீவில் இருந்து வெளியேறினர்.

இதனை தொடர்ந்து தற்போது உக்ரைனிய வீரர்கள் பாம்பு தீவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உக்ரைன் நாட்டு தேசிய கொடியை அங்கு ஏற்றியுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments