பாலமயூரனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

You are currently viewing பாலமயூரனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பயணியொருவர் தவறவிட்ட 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய பணம், கைபேசியென்பவற்றை பேருந்து நடத்துனர் கண்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.கொழும்பிலிருந்து பருத்தித்துறைக்கு பயணித்த இ.போ.ச பேருந்து நடத்துனரான பாலமயூரன் என்பவரே பணம், கைபேசியென்பவற்றை கண்டெடுத்தார்.
251,000 ரூபா பணம், 70,000 ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி என்பனவே கண்டெடுக்கப்பட்டது.இவற்றை இன்று பருத்தித்துறை சாலை முகாமையாளரிடம் அவர் ஒப்படைத்துள்ளார். அவரது முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பருத்தித்துறை சாலை நிர்வாகம் மற்றும் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.சிறு தொகை பணத்தை மீட்டால் கூட மீளக் கொடுப்பதற்கு பல முறை சிந்திக்கும் இன்றைய கால கட்டத்தில், பெரு மனதுடன் நடந்து கொண்ட நடத்தனர் பாலமயூரனின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்

பகிர்ந்துகொள்ள