பிரான்சில் காணாமல் போன தமிழர் மரணம்!

You are currently viewing பிரான்சில் காணாமல் போன தமிழர் மரணம்!

சில வாரங்களுக்கு முன்பு பிரான்ஸில் காணாமல் போனதாக காவல்துறையினரால் தேடப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களின் முன்னர் பிரான்ஸ் வில்யுப் நகரில் வசித்து வந்த 41 வயதான யாழ் குடும்பஸ்தரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காணாமல் போனவரின், மனைவி பிள்ளைகள் யாழ்ப்பாணம் மல்லாகத்தில் வசித்து வரும் நிலையில், தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

வதிவிட விசா கிடைக்காத நிலையில், குறித்த நபர் பல தமிழ் வர்த்தக நிலையங்களில் பணியாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை காணாமல் போன நபர் இறுதியாக தான் இருந்த வீட்டு உரிமையாளருடன் முரண்பட்டு விட்டுச் சென்ற நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments